ஆளும் தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணி, அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணி, தாங்கள்தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ், பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் மேற்கண்ட எதாவது ஒரு அணியில் ஐக்கியமாகிவிட, தேர்தல் அரசியலின் சூட்சுமம் தெரியாத ம.தி.மு.க ஒதுங்கிவிட, கம்யூனிஸ்ட் கட்சிகள் அ.தி.மு.க அணியில் சேர்ந்துகொள்ள, மூன்றாவது அணி என்று பெயரளவில் பா.ஜ.க போட்டியிட, தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
ஒரு சாதாரண குடிமகன், நல்லவன், பொதுநலம் மிக்கவன், ஆளுமை பண்பு உடையவன். தன்னுடைய தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவன். தன்னால் இயன்ற அளவு பொது சேவை செய்து வருபவன். தொகுதி முழுவதும் அறிமுகம் உடையவன். ஆனால், எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். இப்படிப்பட்ட ஒருவன் தேர்தலில் போட்டியிடுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவனால் வெற்றி பெற முடியாது என்பது மட்டுமல்ல, அவன் கட்டிய வைப்புத்தொகை (deposit) கூட அவனுக்கு கிடைக்காது என்பதுதான் நிதர்சனம்.
அரசியல்வாதியின் வாரிசு, சினிமா நடிகன் இவர்கள்தான் மக்கள் பணி செய்ய முடியும் என்கிற அவல நிலைதான் தற்பொழுது இருக்கிறது. கட்சிகளும் உண்மையான தொண்டனை கண்டுகொள்வதில்லை. வாரிசுகளை தவிர்த்து, யாரால் கோடிகணக்காக செலவு செய்ய முடியும், யாரால் குறிப்பிட்ட சாதி அல்லது மத ஓட்டுகளை பெற முடியும், யாருக்கு போதுமான படைபலம் உள்ளது என்ற அடிப்படையிலேயே கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்கின்றன.
ஒரு வேட்பாளருடைய தேர்தல் செலவிற்கு தேர்தல் கமிஷன் தற்பொழுது நிர்ணயித்துள்ள தொகை 16 லட்சம். ஆனால், பிரபல கட்சி வேட்பாளர்கள் 2 கோடி முதல் 20 கோடி வரை செலவு செய்கிறார்கள் என்றாலும், 16 லட்சம் கணக்கு காட்ட முடிகிறது என்றால் சட்டசபை உறுப்பினர் ஆவதற்கு முன்னதாகவே ஊழல் ஆரம்பித்து விடுகிறது. மக்களாட்சியின் அடிப்படையே இந்த இடத்தில இருந்துதான் ஆட்டம் காண்கிறது. இவ்வளவு பணம் ஒரு வேட்பாளருக்கு எப்படி கிடைக்கிறது. சொந்த பணம், கட்சி நிதி, ஆட்சியில் இருந்த பொழுது ஊழல் செய்த பணம், என்று பல வகைகளில் இந்த பணம் வருகிறது. இத்தனை கோடிகள் செலவு செய்து அதை அடுத்த 5 வருட ஆட்சிக் காலத்தில் சம்பாதிக்க முற்படும்போது 'மக்களாட்சி' வியாபாரமாக மாறி விடுகிறது.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தற்பொழுது உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்றால், கடந்த தேர்தலின்பொழுது அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தையும், தற்பொழுது தாக்கல் செய்துள்ள சொத்து விவரத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். தன்னுடைய மக்கள் பணிக்காக மாதம் 30 ஆயிரம் ஊதியம் பெற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சொத்து மதிப்பு இடைப்பட்ட காலத்தில் எப்படி இவ்வளவு உயர்ந்தது என்று ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.
தேர்தலின் பொழுது ஓட்டுக்காக மக்கள் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கும் வேட்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று விட்டால், மக்கள் தொண்டன் என்பதை மறந்து, 'நானே அரசன்' என்கிற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். அரசாங்க அதிகாரிகளும் காலில் விழாத குறையாக இவர்கள் உத்தரவுக்கு காத்திருக்க, சாதாரண மனிதர்கள் போல இவர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள் என்கிற அதிகாரம் தெரிந்தோ தெரியாமலோ இவர்களுக்கு வழங்கப்பட்டுவிட, பதவி மோகம் இவர்களை ஆட்கொண்டு விடுகிறது. அதனால், சாகும் வரை பதவியில் இருந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்.
முன்பெல்லாம் கட்சி நிதிக்காக உண்டியல் ஏந்தி பொதுமக்களிடம் நிதி திரட்டப்படுவதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், தற்பொழுது அப்பழக்கம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது. பெரிய பெரிய தொழில் நிறுவனங்களிடம் கட்சிகள் நிதி பெற்று கொள்கின்றன. இதற்கு கைமாறாக கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றன. அதுமட்டுமல்லாமல், மக்களுக்காக செய்யப்படும் எல்லாவிதமான வளர்ச்சி திட்டங்களிலும் ஊழல் செய்வது, அரசியல் வாதிகளின் குடும்பத்திற்காக மட்டுமல்ல, கட்சிக்கும் சேர்த்துதான். உண்டியல் ஏந்தித்தான் அரசியல் நடத்த வேண்டும் என்கிற நிலை மீண்டும் வர வேண்டும், அப்பொழுதுதான் ஊழல் குறைவதற்கான சூழ்நிலை உருவாகும்.
எவ்வளவுதான் ஊழல் புகார்கள் எழுந்தாலும், அரசியல்வாதிகள் ஊழல் செய்ய துணிகிறார்கள் என்றால், என்ன காரணம். பிக்பாக்கெட் திருடனுக்கு கிடைக்கும் தண்டனை கூட ஊழல் அரசியல்வாதிகளுக்கு கிடைப்பதில்லை. நீதிமன்றம் தண்டிப்பதை விட்டுவிட்டு, அரசியல்வாதிகளை எச்சரித்து விடுதலை செய்யும் கொடுமையை என்னவென்று சொல்வது. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி, பிரபல சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே போராடி வருவது வரவேற்கத்தக்கது.
மக்களாட்சி முறை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து மன்னராட்சி முறை நோக்கி சென்று கொண்டு இருக்கும் அவலத்தை நாம்தான் தடுத்து நிறுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்தல் வரும்பொழுதும் அடுத்த முன்னேற்றத்திற்கான படி என்று எண்ண தோன்றாமல், 'குற்றம் - நடக்கப்போவது என்ன' என்ற பீதிதான் கிளம்புகிறது.
இம்முறை தேர்தல் நியாயமாக நடைபெற, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. இம்முயற்சி மக்களாட்சியை மீட்டெடுக்க ஓரளவேனும் உதவும்.
மக்களாட்சியின் தற்போதைய நிலை குறித்து சிந்தித்தால் வெறுப்புதான் மிஞ்சும், ஒதுங்கி போக மனம் எண்ணும். நாம் ஒதுங்கி செல்லச் செல்ல சீரழிவு அதிகமாகி கொண்டேயிருக்கும். மக்களாட்சி தழைத்தோங்க நம்மால் முடிந்தவற்றை நாம் செய்யலாம். ஓட்டுக்கு பணம் பெறுவதை தவிர்க்கலாம். இலவசங்களை பொருட்படுத்தாமல், கட்சி, சாதி, மத வேறுபாடு இல்லாமல் நல்ல வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். எந்த ஒரு வேட்பாளரும் தகுதி இல்லை என்று எண்ணும் பட்சத்தில் 49-ஓ பயன்படுத்தலாம். மக்களாட்சி தத்துவத்தை சரியான பாதையில் பயணிக்க வைக்க 'ஓட்டு' என்னும் ஆயுதத்தை தவறாமல் பயன்படுத்துவோம்.
திங்கள், 11 ஏப்ரல், 2011
திங்கள், 29 நவம்பர், 2010
ஆசிய விளையாட்டு போட்டிகள் 2010 - சில துளிகள்

வரலாற்றுத் துளிகள்!
* ஆசிய விளையாட்டு போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும்.
* முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1952-ஆம் ஆண்டு இந்தியாவின் தலை நகரம் புது தில்லியில் நடைபெற்றன.
* உலக அளவில் ஒலிம்பிக்ஸ்-க்கு அடுத்து இரண்டாவது பெரிய விளையாட்டு திருவிழா ஆசிய விளையாட்டு போட்டிகள்.
* தற்பொழுது சீன நகரம் குவாங்சு-வில் நடந்து முடிந்தது 16-வது ஆசிய விளையாட்டு போட்டிகள்.
தங்கத் துளிகள்!
* இந்தியாவின் முதல் தங்கத்தை பில்லியர்ட்ஸ் தனிநபர் பிரிவில் வென்று தங்க வேட்டையை துவக்கி வைத்தார் பங்கஜ் அத்வானி.
* துடுப்பு படகு தனிநபர் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங்லால் தாக்கர் தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.
* ஆண்கள் ஒற்றையர் டபுள்டிராப் பிரிவு துப்பாக்கிச்சுடும் போட்டியில் ரஞ்சன் சோதி தங்கம் வென்றார்.
* 10,000 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தய பிரிவில் பிரீஜா ஸ்ரீதரன் தங்கம் வென்றார்.
* 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வீராங்கனை சுதா சிங் தங்கப் பதக்கம் வென்றார்.
* டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் சோம்தேவ் தேவ்வர்மன், சனம் சிங் இணை தங்கத்தை வென்றது.
* டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ் தேவ்வர்மன் தங்கம் வென்றது புதிய வரலாறு, இத்துடன் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று இந்தியாவின் "தங்க நாயகன்" ஆனார்.
* மகளிர் 400மீ தடை ஓட்ட போட்டியில் அஷ்வினி சிதானந்தா தங்கம் வென்றார்.
* இதே போட்டியின் ஆடவர் பிரிவில் ஜோசப் ஆப்ரகாம் தங்கம் வென்றார்.
* ஆடவர் குத்துச் சண்டை போட்டியில் 60கிலோ உடல் எடைப்பிரிவில் விகாஸ் கிருஷ்ணன் தங்கம் வென்றார்.
* மகளிர் கபடி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.
* ஆடவர் கபடி போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.
தொடர்ந்து 6-வது முறையாக தங்கம் வென்று சாதனையை தொடர்கிறது இந்திய கபடி அணி.
* மன்ஜீத் கௌர், சினி ஜோஸ், அஸ்வினி சிதானந்தா, மன்தீப் கௌர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
* 75 கிலோ எடைப்பிரிவு ஆடவர் குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் விஜேந்தர் சிங் தங்கம் வென்றார். நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தினார் "தங்க மகன்" விஜேந்தர் சிங்.
குறிப்பிடத்தக்க வெள்ளி துளிகள்!
* 10 மீட்டர் ஏர்ரைபில்ஸ் போட்டியில் ககன்நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
* பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு பிரிவில் ஹீனா சித்து, அனு ராஜ் சிங், சோனாய் ராய் ஆகியோர் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தங்கத்தை தவற விட்டு வெள்ளி வென்றனர்.
* டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா, விஷ்ணு வர்தன் இணை வெள்ளி வென்றது.
* 10,000 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தய பிரிவில் கவிதா ரெளத் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
* 60 கிலோ ஊஷு போட்டி, சான்ஷோ பிரிவில் சந்தியாராணி தேவி வெள்ளி வென்றார்.
* தனிநபர் வில்வித்தை போட்டியில் வில்வித்தை வீரர் தருண்தீப் ராய் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
* குத்துச் சண்டை போட்டியில் சந்தோஷ் குமார் (64 கிலோ), தினேஷ் குமார் (81 கிலோ), மன்பிரீத் சிங் (91 கிலோ) தத்தமது பிரிவுகளில் வெள்ளி பதக்கம் வென்றனர்.
குறிப்பிடத்தக்க வெண்கலத் துளிகள்!
* பில்லியர்ட்ஸ் 8-பால் பூல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் அலோக் குமார்.
* ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் ஆஷிஷ் குமார் வெண்கலம் வென்று, இந்த பிரிவில் இதுவரை ஆசியப் போட்டிகளில் பதக்கம் இல்லாத நிலையைப் போக்கினார்.
* நீச்சல் வீரர் வீர்தவால் கடே 50மீ பட்டர்ஃபிளை போட்டியில் வெண்கலம் வென்றார். இப்பிரிவில் முதன் முறையாக பதக்கம் வென்றது இந்தியா.
* வில்வித்தை போட்டி மகளிர் அணி பிரிவில் தீபிகா குமாரி, போரா பானர்ஜி, ரிமில் புரியுல் வெண்கலம் பெற்றுத் தந்தனர்.
* பெண்கள் தனிநபர் சதுரங்க போட்டியில் ஹரிகா துரோணவல்லி வெண்கலம் வென்றார்.
* ஆண்கள் குழு சதுரங்க போட்டியில் சசிகிரண், சூர்ய சேகர் கங்குலி, அதிபன் மற்றும் கோபால் ஆகியோரை கொண்ட அணி வெண்கலம் வென்றது.
* ஆடவர் தனிநபர் ப்ரீ ஸ்கேட்டிங் பிரிவில் இந்திய வீரர் அனுப் குமார் யாமா வெண்கலம் வென்றார். ஜோடிப் பிரிவில் அனுப் - அவானி பஞ்சால் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றனர்.
ஏமாற்றத் துளிகள்!
* காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் துப்பாக்கிச் சுடுதலில் தங்க பதக்கத்தை குவித்ததையடுத்து, ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்த வெற்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு தங்கம், சில வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது பெரிதும் ஏமாற்றமளித்தது.
* நட்சத்திர இறகுப்பந்து வீராங்கனை சாய்னா நெஹ்வால் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் போனது மற்றுமொரு ஏமாற்றம்.
நம்பிக்கை துளிகள்!
* குத்துச் சண்டை போட்டியில் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது, வரும் காலங்களில் இவ்விளையாட்டு மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
* 609 வீரர், வீராங்கனைகளுடன் களம் இறங்கிய இந்தியா 14 தங்கம் உள்பட 64 பதக்கங்களுடன் 6-வது இடம் பிடித்தது.
* கடந்த 2006-ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டை விட இப்போது இந்தியாவின் செயல்பாடு மேம்பட்டு இருக்கிறது. கடந்த முறை இந்தியா 10 தங்கம் உள்பட 53 பதக்கத்துடன் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது.
* அத்துடன் ஒட்டுமொத்த ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியா அதிகபதக்கங்கள் வென்ற போட்டியாகவும் இது பதிவாகி இருக்கிறது. 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 57 பதக்கம் வென்றதே இந்தியாவின் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.
* 199 தங்கப் பதக்கங்களுடன் போட்டிகளை நடத்திய சீனா முதனிலை பெற்றது. தென்கொரியா 2-வது மற்றும் ஜப்பான் 3-வது இடம் பிடித்தன.
* 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியா நாட்டின் இன்சான் நகரில்
2014-ல் நடைபெற உள்ளன.
டிஸ்கி:
ஆசிய விளையாட்டு போட்டியில் முதன்முறையாக 20-20 கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வேறு தொடர்களை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கிரிக்கெட் போட்டிக்கு அணி அனுப்ப மறுத்துவிட்டது. கிரிக்கெட் அணி சென்று இருந்தால், கிரிக்கெட் போட்டியை தவிர்த்து வேறு எந்த போட்டிக்கும் இந்திய ஊடகங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் முக்கியத்துவம் வழங்கி இருக்க மாட்டார்கள் என்பதால், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் முடிவு பாராட்டுக்குரியது.
லேபிள்கள்:
ஆசிய விளையாட்டு,
இந்திய விளையாட்டு,
குவாங்சு,
விளையாட்டு
செவ்வாய், 19 அக்டோபர், 2010
காமன்வெல்த் விளையாட்டு திருவிழா 2010
சர்ச்சைகளை தவிர்த்து விட்டு பார்த்தால், முதல் முறையாக காமன்வெல்த் (11-வது) போட்டிகளை தில்லியில் சிறப்பாகவே நடத்தி முடித்திருக்கிறது இந்தியா!
இதோ! சில சாதனை துளிகள்:
* இந்த போட்டியின் "தங்க மகன்" ககன் நரங் இந்தியாவிற்க்கான முதல் தங்கத்தை "ஒலிம்பிக் நாயகன்" அபினவ் பிந்த்ராவுடன் சேர்ந்து 10மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் சுட்டு தந்தார்.
* ககன் நரங் வென்ற தங்க பதக்கங்கள் மொத்தம் நான்கு, இரு தனி நபர் , இரு குழு போட்டி.
* துப்பாக்கிச்சுடும் வீராங்கனை அனிஸா சயீத் வென்ற தங்க பதக்கங்கள் இரண்டு, ஒரு தனி நபர், ஒரு குழு போட்டி.
* மல்யுத்த வீராங்கனை அல்கா டோமர் கனடா வீராங்கனை டோன்யா-வை வீழ்த்தி தங்கம் வென்றார்.
* 16-றே வயதான தீபிகா குமாரி வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார்.
* உலக விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பதக்கம் வென்றது இந்தியா. ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என இரு பதக்கங்களையும் வென்று இச்சாதைனையை நிகழ்த்தினார் ஆஷிஷ் குமார்.
* நட்சத்திர வீரர்கள் லியான்டர் பயஸ், மகேஷ் பூபதி ஏமாற்றிய நிலையில் சோம்தேவ் தேவ்வர்மன் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றது சிறப்பு.
* மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற சுஷில் குமார் இந்த காமன்வெல்த் போட்டியின் ஆகச்சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.
* "பறக்கும் சீக்கியர்" மில்கா சிங்க்கிற்கு பிறகு 52 வருடங்கள் கழித்து தடகளத்தில் முதல் தங்கம் வட்டு எறிதல் போட்டியில் பெற்று தந்தார் கிருஷ்ணா பூனியா, இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வென்று அழகுக்கு அழகு சேர்த்தனர்.
* சரத் கமல் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் கோட்டைவிட்ட தங்கத்தை சுபாஜித் சஹாவுடன் சேர்ந்து இரட்டையர் போட்டியில் வென்றுகாட்டினார்.
* சமீப காலங்களாக சோபிக்காத இந்திய ஹாக்கி அணி, அரைஇறுதியில் இங்கிலாந்தை வென்று இறுதியை எட்டியது. இறுதி போட்டியில் உலகசாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனாலும் முதல் முறை காமன்வெல்த் பதக்கத்தை (வெள்ளி) வென்றது இத்திருவிழாவின் சிறப்புகளில் ஓன்று.
* "தங்க மங்கை" சாய்னா நெஹ்வால் இறகுப்பந்து போட்டியில் தங்கத்தை வென்றதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் இரண்டாவது இடத்தையும் உறுதி செய்தது முத்தாய்ப்பு. (முதலிடம்: ஆஸ்திரேலியா, மூன்றாமிடம்: இங்கிலாந்து)
* 10 தங்க பதக்கங்களுக்குமேல் பெற்றுத்தந்து துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு இந்தியாவின் முதன்மை பதக்க வேட்டை விளையாட்டாக உருவெடுத்திருக்கிறது.
* கடந்த இரு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் நாலாவது இடம் பிடித்த இந்தியா, இம்முறை இரண்டாவது இடம் பிடித்தது இதுவரை நடந்த காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பான பதிவு.
* 2002 போட்டியில் 30 தங்க பதக்கங்களை குவித்த இந்தியா, இம்முறை 32 பதக்கங்களை பெற்று பழைய சாதனையை முறியடித்தது. ஒட்டுமொத்தமாக 100 பதக்கங்களுக்குமேல் முதல் முறை வென்றது மற்றுமொரு சாதனை.
இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணியின் சிறந்த செயல்பாடு, அடுத்து வரும் ஆசியா மற்றும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பெரிதும் எதிர்பார்க்க வைத்திருக்கிறது. 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ்-ல் பத்து பதக்கங்கள் வரை எதிர் பார்க்கலாம் என்பது என் எண்ணம்.
இதோ! சில சாதனை துளிகள்:
* இந்த போட்டியின் "தங்க மகன்" ககன் நரங் இந்தியாவிற்க்கான முதல் தங்கத்தை "ஒலிம்பிக் நாயகன்" அபினவ் பிந்த்ராவுடன் சேர்ந்து 10மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் சுட்டு தந்தார்.
* ககன் நரங் வென்ற தங்க பதக்கங்கள் மொத்தம் நான்கு, இரு தனி நபர் , இரு குழு போட்டி.
* துப்பாக்கிச்சுடும் வீராங்கனை அனிஸா சயீத் வென்ற தங்க பதக்கங்கள் இரண்டு, ஒரு தனி நபர், ஒரு குழு போட்டி.
* மல்யுத்த வீராங்கனை அல்கா டோமர் கனடா வீராங்கனை டோன்யா-வை வீழ்த்தி தங்கம் வென்றார்.
* 16-றே வயதான தீபிகா குமாரி வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார்.
* உலக விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பதக்கம் வென்றது இந்தியா. ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என இரு பதக்கங்களையும் வென்று இச்சாதைனையை நிகழ்த்தினார் ஆஷிஷ் குமார்.
* நட்சத்திர வீரர்கள் லியான்டர் பயஸ், மகேஷ் பூபதி ஏமாற்றிய நிலையில் சோம்தேவ் தேவ்வர்மன் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றது சிறப்பு.
* மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற சுஷில் குமார் இந்த காமன்வெல்த் போட்டியின் ஆகச்சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.
* "பறக்கும் சீக்கியர்" மில்கா சிங்க்கிற்கு பிறகு 52 வருடங்கள் கழித்து தடகளத்தில் முதல் தங்கம் வட்டு எறிதல் போட்டியில் பெற்று தந்தார் கிருஷ்ணா பூனியா, இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வென்று அழகுக்கு அழகு சேர்த்தனர்.
* சரத் கமல் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் கோட்டைவிட்ட தங்கத்தை சுபாஜித் சஹாவுடன் சேர்ந்து இரட்டையர் போட்டியில் வென்றுகாட்டினார்.
* சமீப காலங்களாக சோபிக்காத இந்திய ஹாக்கி அணி, அரைஇறுதியில் இங்கிலாந்தை வென்று இறுதியை எட்டியது. இறுதி போட்டியில் உலகசாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனாலும் முதல் முறை காமன்வெல்த் பதக்கத்தை (வெள்ளி) வென்றது இத்திருவிழாவின் சிறப்புகளில் ஓன்று.
* "தங்க மங்கை" சாய்னா நெஹ்வால் இறகுப்பந்து போட்டியில் தங்கத்தை வென்றதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் இரண்டாவது இடத்தையும் உறுதி செய்தது முத்தாய்ப்பு. (முதலிடம்: ஆஸ்திரேலியா, மூன்றாமிடம்: இங்கிலாந்து)
* 10 தங்க பதக்கங்களுக்குமேல் பெற்றுத்தந்து துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு இந்தியாவின் முதன்மை பதக்க வேட்டை விளையாட்டாக உருவெடுத்திருக்கிறது.
* கடந்த இரு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் நாலாவது இடம் பிடித்த இந்தியா, இம்முறை இரண்டாவது இடம் பிடித்தது இதுவரை நடந்த காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பான பதிவு.
* 2002 போட்டியில் 30 தங்க பதக்கங்களை குவித்த இந்தியா, இம்முறை 32 பதக்கங்களை பெற்று பழைய சாதனையை முறியடித்தது. ஒட்டுமொத்தமாக 100 பதக்கங்களுக்குமேல் முதல் முறை வென்றது மற்றுமொரு சாதனை.
இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணியின் சிறந்த செயல்பாடு, அடுத்து வரும் ஆசியா மற்றும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பெரிதும் எதிர்பார்க்க வைத்திருக்கிறது. 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ்-ல் பத்து பதக்கங்கள் வரை எதிர் பார்க்கலாம் என்பது என் எண்ணம்.
வெள்ளி, 5 மார்ச், 2010
உலகக்கோப்பை ஹாக்கி திருவிழா 2010 - 2
கிரிக்கெட் உலகின் பிதாமகன் பிராட்மேனுக்கு இணையாக போற்றப்படுபவர் இந்திய ஹாக்கி வீரர் தயான் சந்த். மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் (1928, 1932, 1936) தங்கம் வென்ற இந்திய அணியில் விளையாடியவர் பத்ம பூஷன் தயான் சந்த். ஹாக்கி மந்திரவாதி (Wizard of Hockey) என்று அழைக்கபடுபவர் இந்த தயான் சந்த். இவர் தன்னுடைய இறுதிக் காலங்களை மருத்துவமனையில் கழித்த பொழுது, இந்திய அணியின் அன்றைய நிலைமையைப் பார்த்து, இந்திய ஹாக்கி செத்துக் கொண்டு இருக்கிறது என்று கூறினாராம். நேற்றைய இந்திய ஸ்பெயின் ஆட்டத்தைப் பார்த்தபோது இதுதான் ஞாபகத்துக்கு வந்தது.
முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற நமது அணி, இரண்டாவது போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனது. மூன்றாவது போட்டியான ஸ்பெயினுக்கு எதிரான நேற்றைய போட்டியில் கண்டிப்பாக வென்றால்தான் அரைஇறுதிக்கு முன்னேற வாய்ப்பு என்கிற நிலையில் நமது அணி தோற்றது பரிதாபம். இந்திய அணி வீரர்கள் சிறப்பாகத்தான் ஆடினார்கள் என்றாலும் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் வீணாக்கினார்கள். ஆனால் ஸ்பெயின் அணி வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் அத்தனையும் கோலாக மாற்றினார்கள். இனி அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு மிகவும் அரிது என்றாலும் மீதமிருக்கும் இரு போட்டிகளை வென்றால் ஒரு கெளரவமான இடத்தை பிடிக்கலாம்.
இந்திய அணியின் தோல்வி, விளையாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் என்றாலும், பிற அணிகள் மோதும் போட்டிகளும் மிகவும் சிறப்பாகவே உள்ளன. பொதுவாக விளையாட்டு ரசிகர்கள் எந்த அணி விளையாடுகிறது என்பதை விட விளையாட்டு எவ்வளவு சுவாரஸ்யம் தருகிறது என்பதை பொறுத்தே ரசிப்பார்கள். அந்த வகையில் இந்த உலகக்கோப்பையின் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாகவே உள்ளன. இறுதி போட்டிகள் நெருங்கி வருகின்ற வேளையில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற ஆர்வமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற நமது அணி, இரண்டாவது போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனது. மூன்றாவது போட்டியான ஸ்பெயினுக்கு எதிரான நேற்றைய போட்டியில் கண்டிப்பாக வென்றால்தான் அரைஇறுதிக்கு முன்னேற வாய்ப்பு என்கிற நிலையில் நமது அணி தோற்றது பரிதாபம். இந்திய அணி வீரர்கள் சிறப்பாகத்தான் ஆடினார்கள் என்றாலும் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் வீணாக்கினார்கள். ஆனால் ஸ்பெயின் அணி வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் அத்தனையும் கோலாக மாற்றினார்கள். இனி அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு மிகவும் அரிது என்றாலும் மீதமிருக்கும் இரு போட்டிகளை வென்றால் ஒரு கெளரவமான இடத்தை பிடிக்கலாம்.
இந்திய அணியின் தோல்வி, விளையாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் என்றாலும், பிற அணிகள் மோதும் போட்டிகளும் மிகவும் சிறப்பாகவே உள்ளன. பொதுவாக விளையாட்டு ரசிகர்கள் எந்த அணி விளையாடுகிறது என்பதை விட விளையாட்டு எவ்வளவு சுவாரஸ்யம் தருகிறது என்பதை பொறுத்தே ரசிப்பார்கள். அந்த வகையில் இந்த உலகக்கோப்பையின் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாகவே உள்ளன. இறுதி போட்டிகள் நெருங்கி வருகின்ற வேளையில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற ஆர்வமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
லேபிள்கள்:
உலகக்கோப்பை,
விளையாட்டு,
ஹாக்கி
செவ்வாய், 2 மார்ச், 2010
உலகக்கோப்பை ஹாக்கி திருவிழா 2010 - 1
நண்பர்களே, 12-வது உலகக்கோப்பை ஹாக்கி 28/02/2010-அன்று இந்திய தலைநகரம் நியூ டெல்லி தயான் சந்த் விளையாட்டு அரங்கில் தொடங்கிய செய்தி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். பணம்கொழிக்கும் பொழுதுபோக்கான கிரிக்கெட்டுக்கு-முன் இந்த ஹாக்கி உலகக்கோப்பை அமுங்கிப்போய் விடுவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். கிளப் (club) அளவிலான போட்டிகளான ஐபில் (IPL) கிரிக்கெட் போட்டிகளின் டிக்கெட் விற்பனைக்கு நாட்டுப்பற்றை பயன்படுத்த முயற்ச்சிக்கும் விளம்பரங்களை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஹாக்கிக்கு போதிய விளம்பரங்கள் இல்லை என்றாலும் நடந்துகொண்டிருப்பது ஒரு உலகக்கோப்பை என்பதை விளையாட்டு ஆர்வலர்கள் மனதில் கொண்டால் போதும். டெல்லி-க்கு சென்று போட்டிகளை காணமுடியாது என்றாலும் தொலைக்காட்சியில் பார்ப்பதன் மூலம் நமது ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்கலாம்.
ஹாக்கி நமது தேசிய விளையாட்டு என்பது நீங்கள் அறிந்ததே. 8 முறை ஒலிம்பிக் தங்க பதக்கத்தை வெற்றி கொண்டுள்ள இந்திய அணி ஒரே ஒருமுறை (1975) உலகக்கோப்பையையும் வென்று உள்ளது. இப்படி ஒருகாலத்தில் உலகின் வல்லரசாக விளங்கிய இந்திய ஹாக்கி அணியின் தற்போதைய நிலைமை கொஞ்சம் கவலைக்கிடம்தான். கடந்த உலகக்கோப்பையில் நமது அணி பிடித்த இடம் 11. இந்த உலககோப்பையிலும் பணபிரச்சினை, தலைமை பதவி பிரச்சினை போன்ற பலதரப்பட்ட சிக்கல்களுக்கிடையில் நமது அணி கலந்து கொள்கிறது. நமது அணியை தவிர்த்து பாகிஸ்தான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாண்ட்ஸ் போன்ற 11 பிற அணிகளும் கலந்துகொள்கின்றன. தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருந்தாலும் எந்த அணியும் பின்வாங்காமல் போட்டியில் பங்குகொள்ள வந்து இருப்பது விளையாட்டுக்கு கிடைத்த வெற்றி.
கடந்த ஞாயிறு (28/02/2010) நடந்த முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை மிகவும் எளிதாக தோற்க்கடித்தது. தவறுதலாக குண்டடிபட்டதன் காரணமாக கடந்த உலகக்கோப்பையில் பங்குகொள்ளாத சந்தீப்சிங் சிறப்பாக ஆடி இரண்டு பெனால்டி கார்னர் (penalty corner) வாய்ப்புகளை கோல்-ஆக (goal) மாற்றினார். முதல் போட்டியில் இந்திய அணி ஆடிய விதத்தை வைத்து பார்க்கும்பொழுது ராஜ்பால்சிங் தலைமையிலான இந்திய அணி இம்முறை அரையிறுதிவரையாவது முன்னேற முடியும் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.
கிரிக்கெட் போலவே ஹாக்கியிலும் ஆஸ்திரேலியா முதல் ராங்கிங்கில் (ranking) உள்ள அணி என்பதால் கோப்பையை வெற்றிக்கொள்ள முனைந்து செயல்படும். கடந்த இருதடவை கோப்பையை வென்ற அணியான ஜெர்மனி ஹாட்-ட்ரிக் (hat-trick) வெற்றிகொள்ள முயலும். நெதர்லாண்ட்ஸ், கொரியா, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற அணிகளும் கோப்பையை வெல்ல முயற்சி செய்யும். கடந்த முறையைவிட சிறப்பான நிலையை பெறுவதற்கு இந்திய அணி முயற்சி செய்யும் என்பதில் ஐயம் இல்லை. மேலும் இந்த உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பது நமது அணிக்கு சாதகமான அம்சம்.
இந்திய அணி கோப்பையை வென்று கிரிக்கெட் தவிர்த்து பிற விளையாட்டுகளின் மேல் விளையாட்டு ஆர்வலர்களின் கவனம் திரும்ப செய்வதோடு மட்டுமல்லாமல், ஹாக்கி-யில் இன்றும் நாங்கள் வல்லரசுதான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே என்னை போன்ற விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பம்.
ஹாக்கி நமது தேசிய விளையாட்டு என்பது நீங்கள் அறிந்ததே. 8 முறை ஒலிம்பிக் தங்க பதக்கத்தை வெற்றி கொண்டுள்ள இந்திய அணி ஒரே ஒருமுறை (1975) உலகக்கோப்பையையும் வென்று உள்ளது. இப்படி ஒருகாலத்தில் உலகின் வல்லரசாக விளங்கிய இந்திய ஹாக்கி அணியின் தற்போதைய நிலைமை கொஞ்சம் கவலைக்கிடம்தான். கடந்த உலகக்கோப்பையில் நமது அணி பிடித்த இடம் 11. இந்த உலககோப்பையிலும் பணபிரச்சினை, தலைமை பதவி பிரச்சினை போன்ற பலதரப்பட்ட சிக்கல்களுக்கிடையில் நமது அணி கலந்து கொள்கிறது. நமது அணியை தவிர்த்து பாகிஸ்தான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாண்ட்ஸ் போன்ற 11 பிற அணிகளும் கலந்துகொள்கின்றன. தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருந்தாலும் எந்த அணியும் பின்வாங்காமல் போட்டியில் பங்குகொள்ள வந்து இருப்பது விளையாட்டுக்கு கிடைத்த வெற்றி.
கடந்த ஞாயிறு (28/02/2010) நடந்த முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை மிகவும் எளிதாக தோற்க்கடித்தது. தவறுதலாக குண்டடிபட்டதன் காரணமாக கடந்த உலகக்கோப்பையில் பங்குகொள்ளாத சந்தீப்சிங் சிறப்பாக ஆடி இரண்டு பெனால்டி கார்னர் (penalty corner) வாய்ப்புகளை கோல்-ஆக (goal) மாற்றினார். முதல் போட்டியில் இந்திய அணி ஆடிய விதத்தை வைத்து பார்க்கும்பொழுது ராஜ்பால்சிங் தலைமையிலான இந்திய அணி இம்முறை அரையிறுதிவரையாவது முன்னேற முடியும் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.
கிரிக்கெட் போலவே ஹாக்கியிலும் ஆஸ்திரேலியா முதல் ராங்கிங்கில் (ranking) உள்ள அணி என்பதால் கோப்பையை வெற்றிக்கொள்ள முனைந்து செயல்படும். கடந்த இருதடவை கோப்பையை வென்ற அணியான ஜெர்மனி ஹாட்-ட்ரிக் (hat-trick) வெற்றிகொள்ள முயலும். நெதர்லாண்ட்ஸ், கொரியா, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற அணிகளும் கோப்பையை வெல்ல முயற்சி செய்யும். கடந்த முறையைவிட சிறப்பான நிலையை பெறுவதற்கு இந்திய அணி முயற்சி செய்யும் என்பதில் ஐயம் இல்லை. மேலும் இந்த உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பது நமது அணிக்கு சாதகமான அம்சம்.
இந்திய அணி கோப்பையை வென்று கிரிக்கெட் தவிர்த்து பிற விளையாட்டுகளின் மேல் விளையாட்டு ஆர்வலர்களின் கவனம் திரும்ப செய்வதோடு மட்டுமல்லாமல், ஹாக்கி-யில் இன்றும் நாங்கள் வல்லரசுதான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே என்னை போன்ற விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பம்.
செவ்வாய், 24 மார்ச், 2009
ஓட்டு போடு
நண்பர்களே, இந்தியா உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயகம் சிறப்பாக செயல்படுவதற்கு மிக முக்கிய காரணம் மக்கள். மக்களை ஆள்வதற்கு, மக்களை தேர்ந்தெடுக்க, மக்களால் பயன்படுத்தப்படும் ஜனநாயக நடைமுறை தேர்தல். தேர்தல் நடைமுறை சிறப்பாக நடைபெறுவதற்கு மக்களுக்கு அளிக்கப்பட்ட ஆயுதம் ஓட்டு. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நாம், செய்ய வேண்டிய ஓட்டளிக்கும் கடமை குறித்த சிந்தனைதான் இந்தக் கட்டுரை.
ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஆனால் சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் 40 முதல் 45 சதவீதம் பேர் ஓட்டு போடுவதில்லை. ஏன் ஓட்டு போடுவதில்லை என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்க்கான காரணங்கள் பல. பல பேர் சொல்லும் காரணம், "எனக்கு அரசியல் பிடிக்கவில்லை; எந்த அரசியல் கட்சியும் சரியில்லை; எந்த வேட்பாளரும் சரியில்லை; அதனால் ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை". இன்னும் சிலர், எதற்கு விடுமுறை நாளை வீணடிக்க வேண்டும் என்று ஓய்வு எடுப்பார்கள். இந்த இரு அணுகுமுறைகளும் ஆபத்தான விஷயங்கள்.
அரசியலை மக்கள் வெறுப்பதற்க்கான காரணங்களை சிறிது அலசுவோம். ஜனநாயகம் பிறந்த ஆரம்ப காலக்கட்டங்களில் மக்கள்பணி செய்வதற்க்காக சேவை எண்ணத்துடன் கூடிய தலைவர்கள் பலர் இருந்தார்கள். சிறப்பாக மக்கள் பணி செய்தார்கள். பின்னாட்களில் மக்களுக்கு பணி புரிவதற்க்கான எண்ணம் குறைந்து பணம், புகழ் விரும்பிய தலைவர்கள் பலர் தோன்றினார்கள். தற்பொழுது ஆள்பலம், பணபலம் கொண்டவர்களின் தொழில்கூடமாக மாறிவிட்டது அரசியல். இதில் நம்மைப்போன்ற மக்கள் இந்த நிலைகண்டு வருந்தி அரசியலையே வெறுத்து ஒதுக்கி, ஓட்டு உரிமையைக்கூட செய்ய விரும்பாமல் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
அரசியல் இல்லாமல் நம் நாடு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. நம் நாட்டின் முன்னேற்றம் அரசியல்/அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. எனவே வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கும் ஜனநாயகத்தை மீட்க குடிமக்களாகிய நாம் அரசியலுடன் நம்மை தொடர்புபடுத்திக் கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்று. தற்போதைய அரசியல் சூழ்நிலை, சேவை எண்ணம் கொண்ட சாமான்யரும் அரசியலில் பங்கு பெறுவதற்கு ஏற்ற வகையில் இல்லை. எனவே நேரடி அரசியலில் ஈடுபடாவிட்டாலும், நமது ஓட்டு உரிமையை முறையாக பயன்படுத்துவதன்மூலம் அரசியலை மேம்படுத்த முயலலாம்.
அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் நாம் ஒதுங்கிப் போக போக அரசியலின் தரம் தாழ்ந்துகொண்டே போகும். நேர்மையற்ற அரசியல்வாதிகள் பெருகிக் கொண்டே போவார்கள். அதனால் நம்முடைய வாக்கை முறையாக பதிவு செய்து, நல்ல வேட்பாளரை தேர்வு செய்வதன் மூலம் அரசியலின் தரத்தை மேம்படுத்தலாம். யார் ஆட்சி செய்தால் எனக்கு என்ன, என்று ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.
சரி, ஓட்டு போடலாம் என்று முடிவு செய்தாகி விட்டது, ஆனால் எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை, என்ன செய்வது என்று ஒரு குழப்பம் வரலாம். இந்த மாதிரி ஒரு மோசமான சூழ்நிலை வரும் பொழுது பயன்படட்டுமே என்று நமது அரசியல் சட்டங்களை வகுத்தவர்கள் வகுத்த முறைதான் 49 ஓ. அப்படி என்றால் என்ன என்று பார்போம். எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.
எதற்க்காக இந்த முறை என்ற கேள்வி எழுகிறது அல்லவா? எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும், ஏற்கனவே போட்டியிட்ட யாரும் போட்டியிட முடியாது என்பது விதி. விளைவாக, 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும்.
நமது அரசியல் தலைவர்கள் மிகவும் புத்திசாலிகள். இப்படி ஒரு பிரிவு (49 ஓ) அரசியல் சாசனத்தில் இருக்கிறது என்பதை மக்கள் இவ்வளவு நாளும் தெரியாத வகையில் பார்த்துக்கொண்டார்கள். தற்பொழுது சமூக ஆர்வலர்கள் மூலமாக இந்த விஷயம் மிகவும் விரைவாக மக்களிடையே பரவிக்கொண்டு இருக்கிறது. தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையம் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வேட்பாளர் பட்டியலுடன் இணைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் மிகவும் ரகசியமான வாக்கு முறையில் இதுவும் வந்து விடும். மக்களும் எந்தவிதமான பயமின்றி மிகவும் எளிதாக இந்த பிரிவை பயன்படுத்தலாம்.
இந்த முறை (49 ஓ) வருவது ஒருபுறம் இருக்கட்டும். இதனை பயன்படுத்தினால் அரசியல் சீரடையும் வாய்ப்பு ஒருபுறம் இருக்கட்டும். எல்லா தேர்தல்களிலும் தேர்தலை புறக்கணிக்காமல் வாக்களிக்கும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் சிறிது சிந்தித்து வாக்களிப்பது மிகவும் அவசியம். தன் ஜாதி, தன் மதம், தன் கட்சி என்று பாகுபாடு பார்க்காமல் சிறந்த வேட்பாளரை தேர்ந்து எடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு இதுதான் தேவை. அதனால் கண்டிப்பாக ஓட்டு போடுவோம், போடுகின்ற ஓட்டை திறமையான நேர்மையான சேவை எண்ணம் கொண்ட நல்ல வேட்பாளருக்கு போடுவோம்.
ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஆனால் சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் 40 முதல் 45 சதவீதம் பேர் ஓட்டு போடுவதில்லை. ஏன் ஓட்டு போடுவதில்லை என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்க்கான காரணங்கள் பல. பல பேர் சொல்லும் காரணம், "எனக்கு அரசியல் பிடிக்கவில்லை; எந்த அரசியல் கட்சியும் சரியில்லை; எந்த வேட்பாளரும் சரியில்லை; அதனால் ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை". இன்னும் சிலர், எதற்கு விடுமுறை நாளை வீணடிக்க வேண்டும் என்று ஓய்வு எடுப்பார்கள். இந்த இரு அணுகுமுறைகளும் ஆபத்தான விஷயங்கள்.
அரசியலை மக்கள் வெறுப்பதற்க்கான காரணங்களை சிறிது அலசுவோம். ஜனநாயகம் பிறந்த ஆரம்ப காலக்கட்டங்களில் மக்கள்பணி செய்வதற்க்காக சேவை எண்ணத்துடன் கூடிய தலைவர்கள் பலர் இருந்தார்கள். சிறப்பாக மக்கள் பணி செய்தார்கள். பின்னாட்களில் மக்களுக்கு பணி புரிவதற்க்கான எண்ணம் குறைந்து பணம், புகழ் விரும்பிய தலைவர்கள் பலர் தோன்றினார்கள். தற்பொழுது ஆள்பலம், பணபலம் கொண்டவர்களின் தொழில்கூடமாக மாறிவிட்டது அரசியல். இதில் நம்மைப்போன்ற மக்கள் இந்த நிலைகண்டு வருந்தி அரசியலையே வெறுத்து ஒதுக்கி, ஓட்டு உரிமையைக்கூட செய்ய விரும்பாமல் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
அரசியல் இல்லாமல் நம் நாடு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. நம் நாட்டின் முன்னேற்றம் அரசியல்/அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. எனவே வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கும் ஜனநாயகத்தை மீட்க குடிமக்களாகிய நாம் அரசியலுடன் நம்மை தொடர்புபடுத்திக் கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்று. தற்போதைய அரசியல் சூழ்நிலை, சேவை எண்ணம் கொண்ட சாமான்யரும் அரசியலில் பங்கு பெறுவதற்கு ஏற்ற வகையில் இல்லை. எனவே நேரடி அரசியலில் ஈடுபடாவிட்டாலும், நமது ஓட்டு உரிமையை முறையாக பயன்படுத்துவதன்மூலம் அரசியலை மேம்படுத்த முயலலாம்.
அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் நாம் ஒதுங்கிப் போக போக அரசியலின் தரம் தாழ்ந்துகொண்டே போகும். நேர்மையற்ற அரசியல்வாதிகள் பெருகிக் கொண்டே போவார்கள். அதனால் நம்முடைய வாக்கை முறையாக பதிவு செய்து, நல்ல வேட்பாளரை தேர்வு செய்வதன் மூலம் அரசியலின் தரத்தை மேம்படுத்தலாம். யார் ஆட்சி செய்தால் எனக்கு என்ன, என்று ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.
சரி, ஓட்டு போடலாம் என்று முடிவு செய்தாகி விட்டது, ஆனால் எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை, என்ன செய்வது என்று ஒரு குழப்பம் வரலாம். இந்த மாதிரி ஒரு மோசமான சூழ்நிலை வரும் பொழுது பயன்படட்டுமே என்று நமது அரசியல் சட்டங்களை வகுத்தவர்கள் வகுத்த முறைதான் 49 ஓ. அப்படி என்றால் என்ன என்று பார்போம். எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.
எதற்க்காக இந்த முறை என்ற கேள்வி எழுகிறது அல்லவா? எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும், ஏற்கனவே போட்டியிட்ட யாரும் போட்டியிட முடியாது என்பது விதி. விளைவாக, 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும்.
நமது அரசியல் தலைவர்கள் மிகவும் புத்திசாலிகள். இப்படி ஒரு பிரிவு (49 ஓ) அரசியல் சாசனத்தில் இருக்கிறது என்பதை மக்கள் இவ்வளவு நாளும் தெரியாத வகையில் பார்த்துக்கொண்டார்கள். தற்பொழுது சமூக ஆர்வலர்கள் மூலமாக இந்த விஷயம் மிகவும் விரைவாக மக்களிடையே பரவிக்கொண்டு இருக்கிறது. தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையம் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வேட்பாளர் பட்டியலுடன் இணைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் மிகவும் ரகசியமான வாக்கு முறையில் இதுவும் வந்து விடும். மக்களும் எந்தவிதமான பயமின்றி மிகவும் எளிதாக இந்த பிரிவை பயன்படுத்தலாம்.
இந்த முறை (49 ஓ) வருவது ஒருபுறம் இருக்கட்டும். இதனை பயன்படுத்தினால் அரசியல் சீரடையும் வாய்ப்பு ஒருபுறம் இருக்கட்டும். எல்லா தேர்தல்களிலும் தேர்தலை புறக்கணிக்காமல் வாக்களிக்கும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் சிறிது சிந்தித்து வாக்களிப்பது மிகவும் அவசியம். தன் ஜாதி, தன் மதம், தன் கட்சி என்று பாகுபாடு பார்க்காமல் சிறந்த வேட்பாளரை தேர்ந்து எடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு இதுதான் தேவை. அதனால் கண்டிப்பாக ஓட்டு போடுவோம், போடுகின்ற ஓட்டை திறமையான நேர்மையான சேவை எண்ணம் கொண்ட நல்ல வேட்பாளருக்கு போடுவோம்.
வியாழன், 8 ஜனவரி, 2009
சினிமா சினிமா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நண்பர்களே, நம்மிடையே பரவிக்கிடக்கும் சினிமா மோகம் குறித்த சிந்தனைதான் இந்தக் கட்டுரை. சினிமா, மிகவும் சக்தி வாய்ந்த பொழுதுபோக்கு ஊடகம். சினிமா, மக்கள் தலைவர்களை, முதல்வர்களை உருவாக்கிய ஊடகம்.
நமது நாட்டில் சினிமாவிற்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சினிமா நடிகர்கள் தங்களுடைய நடிப்பால் மக்களை மகிழ்ச்சிபடுத்துவதோடு மட்டும் அல்லாமல், மக்களிடையே செல்வாக்கையும் மிக எளிதாக பெற்று விடுகிறார்கள். ஆனால் இத்தகைய செல்வாக்கு எல்லா வகையான நடிகர்களுக்கும் கிடைக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கதாநாயகனாக அரிதாரம் பூசும் நடிகர்களுக்கு மட்டுமே தலைவர் பட்டம் கிடைக்கிறது. எதிர்மறையான வேடங்கள் (வில்லன்) புனையும் நடிகர்களுக்கு தலைவர் அந்தஸ்து கிடைப்பது மிகவும் அரிது. நமது மக்கள் நிழலை நிஜமாக கருதுவதால் இந்த அவலம் தொடர்ந்து வருகின்றது.
கடந்த காலங்களில் நடிகர்கள் மக்களிடையே புகழ் பெற்று விளங்கினார்கள். இன்றைய நடிகர்கள் அதே பாணியை பின்பற்றி புகழ்பெற விரும்புகிறார்கள். அதன் விளைவாக நடிப்பைத்தவிர எல்லாவற்றையும் திரையில் காண்பித்து மக்களை கவர முற்படுகிறார்கள். 'தன் பின்னால் தமிழகமே இருக்கிறது' என்கிற வகையில் வசனங்களும் காட்சிகளும் தன்படங்களில் இடம்பெறுவதை முக்கியமாக கருதுகிறார்கள். இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு உள்ள வியாபார மதிப்பை கணக்கில்கொண்டு இத்தகைய செயல்பாடுகளுக்கு ஒத்துப்போகிறார்கள். வியாபாரம் மட்டுமே நோக்கம் என்று எடுத்துக்கொண்டால் இந்த விஷயங்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதையும் மீறி நாற்காலி கனவு இதன் பின்னணியில் இருப்பது மிகவும் ஆபத்தான விஷயம்.
நமது நாட்டை பொறுத்தவரை சேவை எண்ணம் கொண்ட எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அந்த வகையில் நடிகர்கள் நாடாள வருவது ஒன்றும் தவறு இல்லை. ஆனால், அதற்கு களமாக சினிமா என்னும் பொழுதுபோக்கு ஊடகத்தை பயன்படுத்திக்கொள்ள முனைவது ஏற்றுக்கொள்ள முடியாது.
அறிவியல் வளர்ச்சி முழுமையாக இல்லாத காலகட்டங்களில் சினிமாவை மக்கள் நிஜம் என்று நம்பி, நடிகர்களை தெய்வமாக ஆராதித்திருக்கலாம்.. அறிவியல் வளர்ச்சி அடைந்த இன்றைய காலகட்டங்களில் மக்கள் இன்னும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பெரும்பாலான மக்கள், திரையில் நடிகர்கள் செய்யும் வித்தைகளை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். இது மிகவும் ஆரோக்கியமான விஷயம். ஆனால் இன்றும் சிலர் நடிகர்களுக்கு காவடி தூக்கிக்கொண்டு, நடிகர்களுடைய வார்த்தையை எதிர்பார்த்து தங்களுடைய வாழ்கையை வீணடித்துக்கொண்டு இருப்பது மிகவும் வேதனையான விஷயம். இத்தகைய அப்பாவி மக்களுடைய அறியாமையை திரையுலகினர் பயன்படுத்திக்கொள்கின்றனர். திரை உலகத்தினரை திருத்த முற்படுவதை விட நம் மனதில் மாற்றங்கள் கொண்டு வர முற்படுவது நல்லது.
'என் ரசிகர்கள் (?) விரும்புகிறார்கள்' என்கிற போர்வையில் மசாலாப் படங்களை தருவதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் பல நடிகர்கள்.
பொழுதுபோக்கிற்க்கான மசாலா படங்கள் மட்டுமன்றி, நல்ல படங்கள் தருவதற்க்கான முயற்சிகளையும் அத்தகைய நடிகர்கள் செய்தால் சிறப்பாக இருக்கும். நடிகர்கள், தங்களை சுற்றி தாங்களே ஏற்ப்படுத்திக்கொண்ட போலியான பிம்பத்தை (இமேஜ்) உடைத்து எறிந்துவிட்டு நடிப்பை மட்டும் திரையில் காண்பிக்க முயற்சி செய்ய வேண்டும்.
பத்திரிக்கை, தொலைக்காட்சி போன்ற செய்தி ஊடகங்கள் வியாபார நோக்கில் சினிமாத்துறையினருக்கு அதிமுக்கியத்துவம் தந்து வருகின்றன. நடிகர்களை, மக்கள் தலைவர்களாக உருமாற்றும் பணியை இத்தகைய செய்தி ஊடகங்கள் செய்து வருகின்றன. ஒவ்வொரு பண்டிகை தினங்களின்போதும் நடிகர்/நடிகைகளை சாதனையாளர்களாக கருதி நேர்காணல் செய்வதை ஊடகங்கள் வழக்கமாக கொண்டுள்ளன. இத்தகைய பிரச்சாரங்கள் குறைக்க அல்லது தவிர்க்கப்பட வேண்டும்.
உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து தருவது விவசாயிகளின் வேலை. ஆனால் அது அவர்கள் கடமை என்று அவர்களையே நாம் கண்டுகொள்வது இல்லை. ஆனால் நமது பொழுதுபோக்கிற்கு மட்டும் உத்தரவாதமான நடிகர்களுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
நடிப்பு ஒரு தொழில். நாம் எவ்வாறு நம்முடைய திறமையை வைத்து பணம் ஈட்டி வாழ்கிறோமோ, அதுபோல நடிகர்கள் தங்கள் நடிப்பு திறமையை வைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள். சினிமாவிற்கு இருக்கும் வியாபாரம் பெரிது. சினிமா, மக்கள் எல்லாருக்கும் சென்றடைவதால், சினிமாத்துறையினர் மக்கள் மத்தியில் எளிதாக புகழ் பெறுகிறார்கள். மற்றபடி, அவர்களும் நம் எல்லோரையும் போலத்தான். இன்னும் சொல்ல போனால் நாம் பொழுதுபோக்கிற்க்காக செலவு செய்யும் பணத்தில்தான் அவர்கள் வாழ்க்கை ஓடுகிறது. ஆகையால் சினிமாத்துறையினருக்கு கொடுக்கப்படும் அளவுகடந்த முக்கியத்துவம் தேவையற்ற ஒன்று. ரசிகர்கள் தங்கள் மனங்கவர்ந்த நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, படப்பெட்டிகளுக்கு பூஜை செய்வது, கோயில் கட்டுவது போன்ற அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நம்மைபோலதான் நடிகர்கள் என்று உணர்ந்து, சினிமாவில் நடிகர்களின் நடிப்பை மட்டும் ரசித்து, தனிப்பட்ட வகையில் நடிகர்களை துதி பாடுவதை நிறுத்திக்கொண்டோம் என்றால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மைகள் பல விளையும்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன
நண்பர்களே, நம்மிடையே பரவிக்கிடக்கும் சினிமா மோகம் குறித்த சிந்தனைதான் இந்தக் கட்டுரை. சினிமா, மிகவும் சக்தி வாய்ந்த பொழுதுபோக்கு ஊடகம். சினிமா, மக்கள் தலைவர்களை, முதல்வர்களை உருவாக்கிய ஊடகம்.
நமது நாட்டில் சினிமாவிற்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சினிமா நடிகர்கள் தங்களுடைய நடிப்பால் மக்களை மகிழ்ச்சிபடுத்துவதோடு மட்டும் அல்லாமல், மக்களிடையே செல்வாக்கையும் மிக எளிதாக பெற்று விடுகிறார்கள். ஆனால் இத்தகைய செல்வாக்கு எல்லா வகையான நடிகர்களுக்கும் கிடைக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கதாநாயகனாக அரிதாரம் பூசும் நடிகர்களுக்கு மட்டுமே தலைவர் பட்டம் கிடைக்கிறது. எதிர்மறையான வேடங்கள் (வில்லன்) புனையும் நடிகர்களுக்கு தலைவர் அந்தஸ்து கிடைப்பது மிகவும் அரிது. நமது மக்கள் நிழலை நிஜமாக கருதுவதால் இந்த அவலம் தொடர்ந்து வருகின்றது.
கடந்த காலங்களில் நடிகர்கள் மக்களிடையே புகழ் பெற்று விளங்கினார்கள். இன்றைய நடிகர்கள் அதே பாணியை பின்பற்றி புகழ்பெற விரும்புகிறார்கள். அதன் விளைவாக நடிப்பைத்தவிர எல்லாவற்றையும் திரையில் காண்பித்து மக்களை கவர முற்படுகிறார்கள். 'தன் பின்னால் தமிழகமே இருக்கிறது' என்கிற வகையில் வசனங்களும் காட்சிகளும் தன்படங்களில் இடம்பெறுவதை முக்கியமாக கருதுகிறார்கள். இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு உள்ள வியாபார மதிப்பை கணக்கில்கொண்டு இத்தகைய செயல்பாடுகளுக்கு ஒத்துப்போகிறார்கள். வியாபாரம் மட்டுமே நோக்கம் என்று எடுத்துக்கொண்டால் இந்த விஷயங்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதையும் மீறி நாற்காலி கனவு இதன் பின்னணியில் இருப்பது மிகவும் ஆபத்தான விஷயம்.
நமது நாட்டை பொறுத்தவரை சேவை எண்ணம் கொண்ட எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அந்த வகையில் நடிகர்கள் நாடாள வருவது ஒன்றும் தவறு இல்லை. ஆனால், அதற்கு களமாக சினிமா என்னும் பொழுதுபோக்கு ஊடகத்தை பயன்படுத்திக்கொள்ள முனைவது ஏற்றுக்கொள்ள முடியாது.
அறிவியல் வளர்ச்சி முழுமையாக இல்லாத காலகட்டங்களில் சினிமாவை மக்கள் நிஜம் என்று நம்பி, நடிகர்களை தெய்வமாக ஆராதித்திருக்கலாம்.. அறிவியல் வளர்ச்சி அடைந்த இன்றைய காலகட்டங்களில் மக்கள் இன்னும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பெரும்பாலான மக்கள், திரையில் நடிகர்கள் செய்யும் வித்தைகளை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். இது மிகவும் ஆரோக்கியமான விஷயம். ஆனால் இன்றும் சிலர் நடிகர்களுக்கு காவடி தூக்கிக்கொண்டு, நடிகர்களுடைய வார்த்தையை எதிர்பார்த்து தங்களுடைய வாழ்கையை வீணடித்துக்கொண்டு இருப்பது மிகவும் வேதனையான விஷயம். இத்தகைய அப்பாவி மக்களுடைய அறியாமையை திரையுலகினர் பயன்படுத்திக்கொள்கின்றனர். திரை உலகத்தினரை திருத்த முற்படுவதை விட நம் மனதில் மாற்றங்கள் கொண்டு வர முற்படுவது நல்லது.
'என் ரசிகர்கள் (?) விரும்புகிறார்கள்' என்கிற போர்வையில் மசாலாப் படங்களை தருவதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் பல நடிகர்கள்.
பொழுதுபோக்கிற்க்கான மசாலா படங்கள் மட்டுமன்றி, நல்ல படங்கள் தருவதற்க்கான முயற்சிகளையும் அத்தகைய நடிகர்கள் செய்தால் சிறப்பாக இருக்கும். நடிகர்கள், தங்களை சுற்றி தாங்களே ஏற்ப்படுத்திக்கொண்ட போலியான பிம்பத்தை (இமேஜ்) உடைத்து எறிந்துவிட்டு நடிப்பை மட்டும் திரையில் காண்பிக்க முயற்சி செய்ய வேண்டும்.
பத்திரிக்கை, தொலைக்காட்சி போன்ற செய்தி ஊடகங்கள் வியாபார நோக்கில் சினிமாத்துறையினருக்கு அதிமுக்கியத்துவம் தந்து வருகின்றன. நடிகர்களை, மக்கள் தலைவர்களாக உருமாற்றும் பணியை இத்தகைய செய்தி ஊடகங்கள் செய்து வருகின்றன. ஒவ்வொரு பண்டிகை தினங்களின்போதும் நடிகர்/நடிகைகளை சாதனையாளர்களாக கருதி நேர்காணல் செய்வதை ஊடகங்கள் வழக்கமாக கொண்டுள்ளன. இத்தகைய பிரச்சாரங்கள் குறைக்க அல்லது தவிர்க்கப்பட வேண்டும்.
உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து தருவது விவசாயிகளின் வேலை. ஆனால் அது அவர்கள் கடமை என்று அவர்களையே நாம் கண்டுகொள்வது இல்லை. ஆனால் நமது பொழுதுபோக்கிற்கு மட்டும் உத்தரவாதமான நடிகர்களுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
நடிப்பு ஒரு தொழில். நாம் எவ்வாறு நம்முடைய திறமையை வைத்து பணம் ஈட்டி வாழ்கிறோமோ, அதுபோல நடிகர்கள் தங்கள் நடிப்பு திறமையை வைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள். சினிமாவிற்கு இருக்கும் வியாபாரம் பெரிது. சினிமா, மக்கள் எல்லாருக்கும் சென்றடைவதால், சினிமாத்துறையினர் மக்கள் மத்தியில் எளிதாக புகழ் பெறுகிறார்கள். மற்றபடி, அவர்களும் நம் எல்லோரையும் போலத்தான். இன்னும் சொல்ல போனால் நாம் பொழுதுபோக்கிற்க்காக செலவு செய்யும் பணத்தில்தான் அவர்கள் வாழ்க்கை ஓடுகிறது. ஆகையால் சினிமாத்துறையினருக்கு கொடுக்கப்படும் அளவுகடந்த முக்கியத்துவம் தேவையற்ற ஒன்று. ரசிகர்கள் தங்கள் மனங்கவர்ந்த நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, படப்பெட்டிகளுக்கு பூஜை செய்வது, கோயில் கட்டுவது போன்ற அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நம்மைபோலதான் நடிகர்கள் என்று உணர்ந்து, சினிமாவில் நடிகர்களின் நடிப்பை மட்டும் ரசித்து, தனிப்பட்ட வகையில் நடிகர்களை துதி பாடுவதை நிறுத்திக்கொண்டோம் என்றால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மைகள் பல விளையும்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)