செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012

மீண்டும் ஒரு ஒலிம்பிக்ஸ் லண்டனில் நடந்து முடிந்து விட்டது!

120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியர்களின் சார்பாக கலந்துகொண்ட 83 இந்தியர்கள், அளப்பெரிய வெற்றிகளை குவிக்கவில்லை என்றாலும் கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது, இந்த முறை சிறப்பாகவே தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

பதக்கம் வென்ற இந்தியர்கள்:

வெள்ளி

துப்பாக்கி சுடுதல் (25m rapid fire pistol) - விஜய் குமார்
மல்யுத்தம் (66kg Freestyle) - சுஷில் குமார்

வெண்கலம் 

துப்பாக்கி சுடுதல் (10m Air Rifle) - ககன் நரங்
பெண்கள் குத்துசண்டை (Flyweight 51kg) - மேரிகோம்
பெண்கள் இறகுப்பந்து - சாய்னா நெஹ்வால்
மல்யுத்தம் (60kg Freestyle) - யோகேஷ்வர் தத்

உலக நாடுகள் எல்லாம் தங்களுடைய ஆளுமையை நிரூபிக்க  ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்திக்கொள்கின்றன. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் விளையாட்டு துறையில் நமது நாடு மிகவும் பின்தங்கியே உள்ளதால் ஒலிம்பிக்கில் ஆளுமை செலுத்த முடியவில்லை. நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள், மக்களின் அடிப்படைத்தேவைகள், போக்குவரத்து வசதிகள், அனைவருக்கும் கல்வி, வேலை என்று இன்னும் பல வளர்ச்சி பணிகளில் அரசு கவனம் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால், விளையாட்டில் முழு கவனமும் செலுத்துவதற்கான சூழ்நிலை இல்லை. ஆனால் இருக்கின்ற வசதிகளை கொண்டு 6 பதக்கங்களை நாம் வென்றிருப்பது மகிழ்ச்சியான ஒன்றே. இந்த முறை பெற்ற பதக்கங்கள், அடுத்து 2016-ல் ரியோ டி ஜெனிரோ-வில் (பிரேசில்) நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ்க்கு உத்வேகமாக இருக்கும் என்பதால், அடுத்தமுறை இரட்டை இலக்கத்தில் பதக்க எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.